ප්රාදේශිය ලේකම් කාර්යාල සේවා ගොනු
සිවිල් ලියාපදිංචිය
අවසර පත්ර/ බලපත්ර නිකුත් කිරීම
සහතික පත්ර නිකුත් කිරීම
විශ්රාම වැටුප් ගෙවීම්
ඉඩම් පරිපාලනය
සමාජ සුභසාධන සහ සහන
සමෘද්ධි වැඩසටහන්
ප්රසම්පාදන
සංවර්ධන වැඩසටහන්
අප සපයන සේවාවන්...
ඔබේ අවශ්යතාව අනුව අදාළ කාණ්ඩය වෙත පිවිස පරීක්ෂා කර බලන්න. ඔබ සොයන තොරතුරු එහිදී සොයා ගැනීමට නොහැකි වූයේ නම්, අප ඇමතීමට කාරුණික වන්න.
අප අමතන්නஊழியர் நலன்புரிச்சங்க வருடாந்த ஒன்றுகூடலும் பிரிவுபசார நிகழ்வும் - 2021
காரைநகர் பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச்சங்க வருடாந்த ஒன்றுகூடலும் பிரிவுபசார நிகழ்வும் 06.03.2021 சனிக்கிழமை காலை 09.30 மணிக்கு ஊழியர் நலன்புரிச்சங்க தலைவர் திரு. சி.மயுரன் தலைமையில் ஆரம்பமானது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக எமது பிரதேச செயலரும், நலன்புரிச்சங்க போசகருமாகிய மதிப்புக்குரிய திரு.மரியதாசன் ஜெகூ அவர்கள் கலந்துகொண்டார்.
இந்நிகழ்விலே விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு அழைத்துவரப்பட்டதுடன் மங்கள விளக்கேற்றல், வரவேற்பு நடனம் போன்ற நிகழ்வுகளுடன் ஆரம்பமாகி கடந்த ஆண்டு எமது பிரதேச செயலகத்திலிருந்து ஓய்வுபெற்று, இடமாற்றம் பெற்று சென்ற உத்தியோகத்தர்களின் சேவையைப்பாராட்டி அவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் மகிழ்வுட்டல் நிகழ்வுகள், இசை நிகழ்வுகள் அலுவலர்களால் நிகழ்த்தப்பட்டது. அத்துடன் மதிய உணவும் வழங்கப்பட்டு அதனைத்தொடர்ந்து இசை நிகழ்வுகள் சிறப்பாக நடாத்தப்பட்டு பி.ப 3.30 மணியளவில் விழா இனிதே நிறைவுற்றது.
![]() |
![]() |
மகா சிவராத்திரி விழா - 2021
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கனத்தின் அனுசரணையில் காரைநகர் பிரதேச செயலக மகா சிவராத்திரி விழாவானது 11.03.2021 வியாழக்கிழமை பாலாவேடை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது. பாலாவோடை முத்துமாரி அம்மன் அறநெறிப்பாடசாலை மாணவர்கள், திக்கரை இந்து அறநெறிப்பாடசாலை மாணவர்களின் பேச்சு, தனி நடனம், குழு நடனம், தனிப்பாடல், குழுப்பாடல் போன்ற கலை நிகழ்வுகன் நடைபெற்றன. இந்நிகழ்வில் இந்து கலாசார உத்தியோகத்தர், J/44 கிராம உத்தியோகத்தர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், ஆலய நிர்வாகத்தினர், திக்கரை இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர். மேலும் கலை நிகழ்வில் பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.
![]() |
![]() |
|||||
![]() |
![]() |
73 ஆவது சுதந்திரதின நிகழ்வு

எமது நாட்டின் 73 ஆவது தேசிய சுதந்திரதின விழாவானது 'பாதுகாப்பான தேசம் - செழிப்பான நாடு' எனும் தொனிப்பொருளை முன்னிலைப்படுத்தி 04.02.2021 அன்று காலை 8.00 மணியளவில் காரைநகர் பிரதேச செயலகத்தில் எமது பிரதேச செயலாளர் திரு.மரியதாசன் ஜெகூ அவர்களின் தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமாகியது. அதனை தொடர்ந்து பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் அலுவலக சூழலில் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டதுடன், சுதந்திரதின விழாவின் 'பசுமை' எண்ணக்கருவினை முன்னிலைப்படுத்தி மரக்கன்றுகள் நாட்டும் பணியும் இடம்பெற்றது.
![]() |
![]() |
||
சர்வதேச மகளிர் தினம் - 2021
”நாடும் தேசமும் உலகமும் அவளே” எனும் தொனிப்பொருளில் யாழ் மாவட்ட பெண் தொழில் முயற்சியாளர்களது உற்பத்திப்பொருள் கண்காட்சியும் விற்பனையும் யாழ் மாவட்டச் செயலக வளாகத்தில் 08.03.2021 ஆம் திகதி காலை 08.30 மணி தொடக்கம் 4.30 மணி வரை நடைபெற்றது. இந் நிகழ்வில் காரைநகர் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளான கைப்பை , கை கழுவும் திரவம், பாரம்பரிய உணவுற்பத்தி பொருட்கள், நல்லெண்ணை, தேங்காயெண்ணை, பனை பொருள் உற்பத்திகள் என்பன காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
![]() |
![]() |
||||
தைப்பொங்கல் நிகழ்வு 2021
காரைநகர் பிரதேச செயலக தைப்பொங்கல் நிகழ்வானது காரைநகர் பிரதேச செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் 15.01.2021 அன்று பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் பிரதேச செயலாளர், உதவிப்பிரதேச செயலாளர், உதவித்திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.


































