”நாடும் தேசமும் உலகமும் அவளே” எனும் தொனிப்பொருளில் யாழ் மாவட்ட பெண் தொழில் முயற்சியாளர்களது உற்பத்திப்பொருள் கண்காட்சியும் விற்பனையும் யாழ் மாவட்டச் செயலக வளாகத்தில் 08.03.2021 ஆம் திகதி காலை 08.30 மணி தொடக்கம் 4.30 மணி வரை நடைபெற்றது. இந் நிகழ்வில் காரைநகர் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளான கைப்பை , கை கழுவும் திரவம், பாரம்பரிய உணவுற்பத்தி பொருட்கள், நல்லெண்ணை, தேங்காயெண்ணை, பனை பொருள் உற்பத்திகள் என்பன காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
![]() |
![]() |
||||






















