கொரோனா வைரஸ் தொற்றினால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை தொடர்பாக, காரைநகர் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் 30.03.2020 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிற்பகல் 2 மணியளவில் பிரதேச செயலாளர் திரு.மரியதாஸ் ஜெகூ அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பிரதேச செயலாளர், உதவிப்பிரதேச செயலாளர், கணக்காளர், உதவித்திட்டமிடல் பணிப்பாளர், சுகாதார வைத்திய அதிகாரி, பொலிஸ் பொறுப்பதிகாரி, பிரதேச சபைத் தலைவர் மற்றும் கடற்படைக் கட்டளை அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
![]() |
![]() |






















