ප්රාදේශිය ලේකම් කාර්යාල සේවා ගොනු
සිවිල් ලියාපදිංචිය
අවසර පත්ර/ බලපත්ර නිකුත් කිරීම
සහතික පත්ර නිකුත් කිරීම
විශ්රාම වැටුප් ගෙවීම්
ඉඩම් පරිපාලනය
සමාජ සුභසාධන සහ සහන
සමෘද්ධි වැඩසටහන්
ප්රසම්පාදන
සංවර්ධන වැඩසටහන්
අප සපයන සේවාවන්...
ඔබේ අවශ්යතාව අනුව අදාළ කාණ්ඩය වෙත පිවිස පරීක්ෂා කර බලන්න. ඔබ සොයන තොරතුරු එහිදී සොයා ගැනීමට නොහැකි වූයේ නම්, අප ඇමතීමට කාරුණික වන්න.
අප අමතන්නபெற்றோருக்கான விழிப்புணர்வு நிகழ்வு – 2021
மனிதவலு மற்றும் வேலை வாய்ப்புத் திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டில் 20.07.2021 காலை 10.00 மணிக்கு J/44 ஊரி கிராம அலுவலர் அலுவலகத்தில் பெற்றோரை விழிப்புணர்வூட்டும் நிகழ்வு நடாத்தப்பட்டது. இந்நிகழ்வினை காரைநகர் பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் செல்வி.கு.கஜனி அவர்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் காரை தெற்கு (J/44 ) கிராம அலுவலர் பிரிவைச்சேர்ந்த 46 பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இதன் போது பிள்ளைகளின் இன்றைய நடத்தைகள் தொடர்பானதும் அவர்களை எவ்வாறு நல்வழிப்படுத்தி இந்நாட்டிற்கும் பிரதேசத்திற்கும் சிறந்த கல்விமான்களாக ஆக்குவது தொடர்பான விழிப்புணர்வு ஊட்டப்பட்டது. மேலும் இன்றைய சூழ்நிலையில் மாணவர்களின் கற்றல் செயற்பாடு பற்றி ஆராயப்பட்டு தீர்வுகளும் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் வளவாளர்களாக சண்டிலிப்பாய் மற்றும் உடுவில் பிரதேச செயலக மனித வலு வேலை வாய்ப்புத்திணைக்கள உத்தியோகத்தர்களான திரு.சுரேஸ்குமார் மற்றும் திரு.குகநேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
![]() |
![]() |
பால் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை ஒழிப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்
மகளிர் மற்றும் சிறுவர் முன்பள்ளி மற்றும் ஆரம்பக்கல்வி, கல்விச்சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் இலங்கைப் பெண்கள் பணியகத்தின் நிதி ஒதுக்கீட்டில் முதற்கட்டமாக 25 பயனாளிகளுக்கு பால் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை ஒழிப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்வானது இன்றைய தினம்(14.07.2021) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு எமது உத்தியோகத்தர்களான உளவளத்துணை உத்தியோகத்தர், உளவளத்துணை உதவியாளர் மற்றும் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்களை வளவாளர்களாக கொண்டு நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
![]() |
![]() |
”பால் மற்றும் பால்நிலை வன்முறைகளற்ற ஆரேகாக்கியமான வேலைச்சூழல் ” விழிப்புணர்வு நிகழ்வு
”பால் மற்றும் பால்நிலை வன்முறைகளற்ற ஆரேகாக்கியமான வேலைச்சூழல்” எனும் தொனிப்பொருளில் செயற்பாட்டுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்ட வகையில் முதற்கட்டமாக உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வானது இன்றைய தினம் (17.03.2021) காலை 09.30 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் Solidarity நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் நடைபெற்றது. இந்நிகழ்வில் எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் 25 பேர் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் பால், பால்நிலை, பால்நிலை வன்முறை, பாலியல் தொந்தரவு தொடர்பாகவும் செயற்குழு செயற்பாட்டின் தொடர் செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்படடது.
![]() |
![]() |
இடர்கால நடமாடும் சேவை விபரம் - காரைநகர் பிரதேச செயலகம்

காணி ஆவணங்கள் வழங்கல் நிகழ்வு
காரைநகர் பிரதேச செயலகத்தில் 15.03.2021 ஆம் திகதி பி.ப 3.30 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காரைநகர் தென்மேற்கு (J/45) கிராம அலுவலர் பிரிவில் நீலங்காடு கிராமத்தில் காணிக்கச்சேரி மூலம் தெரிவு செய்யப்பட்ட காணி அற்ற மற்றும் நீண்டகாலமாக காணி ஆவணம் இன்றி அரச காணியில் குடியிருந்த 09 நபர்களுக்கு காணி அபிவிருத்திக் கட்டளைச்சட்டத்தின் கீழ் காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டது.
![]() |
![]() |































