ප්රාදේශිය ලේකම් කාර්යාල සේවා ගොනු
සිවිල් ලියාපදිංචිය
අවසර පත්ර/ බලපත්ර නිකුත් කිරීම
සහතික පත්ර නිකුත් කිරීම
විශ්රාම වැටුප් ගෙවීම්
ඉඩම් පරිපාලනය
සමාජ සුභසාධන සහ සහන
සමෘද්ධි වැඩසටහන්
ප්රසම්පාදන
සංවර්ධන වැඩසටහන්
අප සපයන සේවාවන්...
ඔබේ අවශ්යතාව අනුව අදාළ කාණ්ඩය වෙත පිවිස පරීක්ෂා කර බලන්න. ඔබ සොයන තොරතුරු එහිදී සොයා ගැනීමට නොහැකි වූයේ නම්, අප ඇමතීමට කාරුණික වන්න.
අප අමතන්නசிறுவர் மற்றும் பெண்கள் முறைப்பாடுகளை கையாள்வதற்கான மாதாந்த கலந்துரையாடல்
சிறுவர் மற்றும் பெண்கள் முறைப்பாடுகளை கையாள்வதற்கான மாதாந்த கலந்துரையாடலின் முதலாவது கலந்துரையாடல் உதவிப்பிரதேச செயலாளர் தலைமையில் 12.01.2022 அன்று நடைபெற்றது.
இதில் சுகாதார வைத்திய அதிகாரி, கோட்டக்கல்விப் பணிப்பாளர், பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
![]() |
![]() |
![]() |
![]() |
Year End Party - 2022
காரைநகர் பிரதேச செயலக நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு 08.01.2022 சனிக்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் உத்தியோகததர்களின் கலை ஆற்றல்கள் வெளிப்படுத்தப்பட்டதுடன் உத்தியோகத்தர்களுக்கான பொழுதுபோக்கு விளையாட்டுக்களும் நடைபெற்றன. மேலும் இந்நிகழ்வில் எமது பிரதேச செயலகத்திலிருந்து கடந்த வருடம் இடமாற்றம் பெற்று சென்ற உத்தியோகத்தர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
![]() |
|
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
Commencement of Work - 2022
2022ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வானது 03.01.2021 அன்று காரைநகர் பிரதேச செயலக முன்றலில் காலை 09.00 மணியளவில் தேசியக்கொடியேற்றலுடன் ஆரம்பமாகியது. இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து அலுவலர்கள் 2022 ஆம் ஆண்டுக்கான உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். மேலும் உத்தியோகத்தர்கள் அனைவரும் நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு இரண்டு நிமிட மௌனஅஞ்சலி செலுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து பிரதேச செயலரின் உரை, சுகாதார நடைமுறைகள் தொடர்பான சுகாதார பரிசோதகரின் உரை ஆகியவற்றுடன் நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
பிரதேச செயலக ஒளி விழா - 2021
காரைநகர் பிரதேச செயலக ஒளிவிழா நிகழ்வானது ஊழியர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் தலைவர் திரு.சி.மயூரன் தலைமையில் 22.12.2021 அன்று பி.ப 2.00 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக அருட்பணி B.பிறாயன் அடிகளார் (பரிபாலகர், சில்லாலை பங்கு), அருட்பணி M.ஜெயானந்தராஜா (CACI), அருட்சகோதரி சுதாகரன் சுதாசினி (அமெரிக்கன் சிலோன் மிசன், காரைநகர்) ஆகியோர் கலந்து கொண்டதுடன் உதவிப்பிரதேச செயலாளர், கணக்காளர் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
|
|
![]() |
|












































