காரைநகர் பிரதேச பண்பாட்டுப் பெருவிழாவினை இம்மாத இறுதி வாரத்தில் நடாத்துவதற்கேற்ற வகையில் காரைநகர் சமூக மட்ட அமைப்புகளுடனான கலந்துரையாடல் காரைநகர் பிரதேச செயலாளர் செல்வி.ந.ரஞ்சனா அவர்கள் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 2024.06.05 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் காரைநகர் உதவிப்பிரதேச செயலாளர், கலாசார உத்தியோகத்தர், இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அலுவலர்கள், கலைஞர்கள், கலைமன்றம் மற்றும் சமூக மட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
![]() |
![]() |
![]() |
![]() |
























