நலன்புரி நன்மைகள் சபையின் பொது மக்களுக்கான அறிவித்தல்
நலன்புரி கொடுப்பனவுகளை பெறுவதற்கு தகுதியானவர்களை அடையாளம் காணல் - 2022
2002 ஆம் வருட 24 ஆம் இலக்க நலன்புரி உதவிகள் சட்டத்தில் 7(1) ஆம் பந்தியின் பிரகாரம், நலன்புரி நிவாரண கொடுப்பனவுகளை பெற்றுக் கொடுப்பதற்கு தகுதியானவர்கள் அனைவரையும், அடையாளம் காண்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி தாங்கள், அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற சமுர்த்தி, முதியோர், விஷேட தேவையுடையோர், சிறுநீரக நோயாளர்கள் மற்றும் பொதுசன உதவிக் கொடுப்பனவு போன்றனவற்றில், ஏதேனும் ஒரு நலன்புரி உதவிகளின் முறைமையின் கீழ், தற்போது பயன் பெற்றுக் கொண்டிருப்பின் அல்லது பெற்றுக் கொள்ளப்பட வேண்டியவர்கள் என தாங்கள் கருதினால், கீழ்க் குறிப்பிடப்படும் மாதிரிப்படிவத்துக்கு அமைவாக தயாரித்து விண்ணப்பப் படிவத்தினை, தாங்கள் நிரந்தரமாகவதியும் பிரதேசத்துக்குரிய உத்தியோகத்தர்/சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்/சமூக கிராம சேவை உத்தியோகத்தர்/முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தரின் உறுதிப்படுத்தலுடன், எமது பிரதேச செயலாளருக்கு 2022.09.30 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

காரைநகர் பிரதேச செயலகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழா - 2022
காரைநகர் பிரதேச செயலகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழா - 2022 கடந்த செவ்வாய்க்கிழமை (23.08.2022) அன்று பி.ப 2.00 மணிக்கு யா/காரைநகர் இந்துக்கல்லூரி மைதானத்தில் எமது பிரதேச செயலாளர் திரு.மரியதாசன் ஜெகூ அவர்களது தலைமையில் நடைபெற்றது.
காரைநகர் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான கைவிசேடம் வழங்கல் நிகழ்வு 2022
இன்று பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் சுபகிருது தமிழ் சிங்கள புதுவருடத்தில் எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான கைவிசேடம் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
![]() |
![]() |
![]() |
![]() |










