மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் தொழில்வழிகாட்டல் வாரத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இணையவழியினூடாக நடாத்தப்பட்டு வருகின்ற பேச்சுப்போட்டி நிகழ்வானது இன்று காரைநகர் பிரதேச மாணவர்களிற்கு இணையவழியினூடாக பி.ப 2.00 மணியளவில் நடைபெற்றது. இப்போட்டியில் இணைய வசதிகளை பெற்றுக்கொள்வதில் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மாணவர்கள் Zoom நிகழ்நிலை மூலம் பிரதேச செயலக மனிதவலு வேலைவாய்ப்பு உத்தியோகத்தரின் ஏற்பாட்டில் யாழ்ரன் கல்லூரியில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டனர். ஏனைய மாணவர்கள் இந்நிகழ்வில் தனிப்பட்ட முறையில் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.





















