வீடமைப்புத் திட்டம் 2025 பயனாளிகள் தெரிவு வீடமைப்புத் திட்டம் 2025 பயனாளிகள் தெரிவு
நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சினால் 2025 ம் ஆண்டு எமது செயலக பிரிவில் வீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ரூபா 01 மில்லியன் பெறுமதியான 10 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப் பயனாளிகளை தெரிவு செய்வதற்காக எமது பிரிவில் வீடு தேவையானோர் பட்டியல் Housing Master List இருந்து புள்ளியிடலின் அடிப்படையில் வீட்டுத் திட்டத்திற்கான அடிப்படைத் தகமைகள் மற்றும் தெரிவுக்கான நியதிகளின் அடிப்படையில் பெற்ற புள்ளிகளினை கொண்டு 10 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றின் முழுமையான விபரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் பிரதேச செயலகம் மற்றும் தெரிவு செய்யப்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இத் தெரிவு தொடர்பாக ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின் எழுத்து மூலம் 07.03.2025 திகதிக்கு முன்னதாக பிரதேச செயலக வரவேற்பு கரும பீடத்தில் வைக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டத்திற்கான முறைப்பாட்டு பெட்டியில் செலுத்த முடியும். இத் திகதிக்கு பின்னர் கிடைக்கப் பெறும் முறைப்பாடுகள் எவையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது என்பதனையும் அறியத்தருகின்றேன்.
(குறிப்பு - இப்பட்டியல் இறுதியானது அல்ல, முறைப்பாட்டின் பின்னராக மீளாய்வு செய்து இறுதி செய்யப்படும் )
பிரதேச செயலாளர், பிரதேச செயலகம், காரைநகர்
நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சினால் 2025 ம் ஆண்டு எமது செயலக பிரிவில் வீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ரூபா 01 மில்லியன் பெறுமதியான 10 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப் பயனாளிகளை தெரிவு செய்வதற்காக எமது பிரிவில் வீடு தேவையானோர் பட்டியல் Housing Master List இருந்து புள்ளியிடலின் அடிப்படையில் வீட்டுத் திட்டத்திற்கான அடிப்படைத் தகமைகள் மற்றும் தெரிவுக்கான நியதிகளின் அடிப்படையில் பெற்ற புள்ளிகளினை கொண்டு 10 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றின் முழுமையான விபரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் பிரதேச செயலகம் மற்றும் தெரிவு செய்யப்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இத் தெரிவு தொடர்பாக ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின் எழுத்து மூலம் 07.03.2025 திகதிக்கு முன்னதாக பிரதேச செயலக வரவேற்பு கரும பீடத்தில் வைக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டத்திற்கான முறைப்பாட்டு பெட்டியில் செலுத்த முடியும். இத் திகதிக்கு பின்னர் கிடைக்கப் பெறும் முறைப்பாடுகள் எவையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது என்பதனையும் அறியத்தருகின்றேன்.
(குறிப்பு - இப்பட்டியல் இறுதியானது அல்ல, முறைப்பாட்டின் பின்னராக மீளாய்வு செய்து இறுதி செய்யப்படும் )
பிரதேச செயலாளர், பிரதேச செயலகம், காரைநகர்























