அஸ்வெசும நலன்புரி நன்மைகள் நிகழ்ச்சித்திட்டம் 2024
அஸ்வெசும நலன்புரி நன்மைகள் நிகழ்ச்சித்திட்டம் 2024 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
- விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான இறுதி திகதி - 2024.03.15
- நலன்புரி நன்மைகள் சபையின் அஸ்வெசும கொடுப்பனவுகளை புதிதாக பெற்றுக் கொள்ள இருப்பவர்களுக்கு, ஆன்லைன் (online) விண்ணப்பம் வெளியாகி உள்ளது - 2024*
✅விண்ணப்பத்தை online மூலம் நிரப்பி சமர்ப்பிக்க முடியும்.
Online Application* https://iwms.wbb.gov.lk/application
விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்ய கீழ் வரும் link இனை cilck செய்யவும்.


மாபெரும் தொழிற்சந்தை
யாழ் மாவட்டச்செயலகமும், மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களமும் இணைந்து நடாத்தும் ”மாபெரும் தொழிற்சந்தை” 2023.08.19 ஆம் திகதி (சனிக்கிழமை) மு.ப 8.30 மணி தொடக்கம் பி.ப 1.30 மணி வரை யாழ் மாவட்டச்செயலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

உலக உணவுத்திட்டத்தின் கீழ் அவசர மற்றும் ஆரம்பமீட்பு செயற்பாட்டுத்திட்டம் கட்டம் - 3 இற்கான பயனாளிகள் பட்டியல்
- உலக உணவுத்திட்டத்தின் கீழ் அவசர மற்றும் ஆரம்பமீட்பு செயற்பாட்டுத்திட்டம் கட்டம் - 3 இற்கான பயனாளிகளின் பட்டியல் கீழேயுள்ள இணைப்பில் ( பயனாளிகள் விபரம் ) காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
- மேற்படி பட்டியல் தொடர்பான முறைப்பாடுகள் 31.07.2023 வரை ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் பரிசீலனைக்கு உட்படுத்தப்படமாட்டாது.
- தங்களது முறைப்பாடுகளை பிரதேச செயலக நுழைவாயிலுள்ள முறைப்பாட்டு பெட்டியில் இடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நலன்புரி நன்மைகள் சபை உதவி கொடுப்பனவு தொடர்பானது
அரசாங்கத்தினால் இதுவரை வழங்கப்பட்டு வந்த அனைத்துவிதமான நலன்புரி கொடுப்பனவுகளும் கீழ் காணப்படும் விதி முறையின் கீழ் இனி வழங்கப்படும்.
முறைப்பாட்டின் பின்னரான இற்றைப்படுத்தப்பட்ட வீட்டுத்திட்ட பயனாளிகள் பட்டியல்
முறைப்பாட்டின் பின்னரான இற்றைப்படுத்தப்பட்ட வீட்டுத்திட்ட பயனாளிகளின் பட்டியலினை கீழ் காணும் இணைப்பின் மூலம் பார்வையிடவும்.
- இப்பட்டியலின் பயனாளிகள் தெரிவு தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் பிரதேச செயலகத்திற்கு எழுத்து மூலம் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
- 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் திருமணமான குடும்பத்தைச் சேர்ந்த 6 லட்சம் பெறுமதியான வீட்டுத்திட்ட உதவித்தொகையை பெற விரும்புபவர்கள் பிரதேச செயலகத்தில் தங்கள் கோரிக்கையை சமர்ப்பிக்கவும்.




