கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் 12 மாத வேலைத்திட்டத்தில் யூலை மாத வேலைத்திட்டமான கலைப் படைப்புக்களின் சந்தை வேலைத்திட்டமானது 22.07.2021 அன்று காலை 9.00 மணியளவில் காரைநகர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில்உதவிப் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதேச செயலாளர், கணக்காளர், அலுவலக உத்தியோகத்தர்கள், கலைஞர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர். இக்கண்காட்சியில் பாரம்பரியப்பொருட்கள், புத்தகங்கள், பனை சார் உற்பத்திப்பொருட்கள், தைத்த ஆடைகள், காளான் என பல்வேறு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் விற்பனையும் இடம்பெற்றது.
![]() |
![]() |
![]() |
![]() |






















