”பால் மற்றும் பால்நிலை வன்முறைகளற்ற ஆரேகாக்கியமான வேலைச்சூழல்” எனும் தொனிப்பொருளில் செயற்பாட்டுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்ட வகையில் முதற்கட்டமாக உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வானது இன்றைய தினம் (17.03.2021) காலை 09.30 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் Solidarity நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் நடைபெற்றது. இந்நிகழ்வில் எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் 25 பேர் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் பால், பால்நிலை, பால்நிலை வன்முறை, பாலியல் தொந்தரவு தொடர்பாகவும் செயற்குழு செயற்பாட்டின் தொடர் செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்படடது.
![]() |
![]() |






