2021 ம் ஆண்டிற்கான கடமை ஆரம்பிக்கும் நிகழ்வானது காரைநகர் பிரதேச செயலக முன்றலில் 01.01.2021 காலை 9.00 மணியளவில் பிரதேச செயலாளர் திரு.மரியதாசன் ஜெகூ அவர்களின் தலைமையில் தேசிய கொடியேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அடுத்து மௌன அஞ்சலி, மற்றும் சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்வுகளுடன் 2021 ஆம் ஆண்டுக்கான கடமைகள் இனிதே ஆரம்பிக்கப்பட்டது.
அடுத்து எமது பிரதேச செயலாளர் திரு.மரியதாசன் ஜெகூ அவர்களின் வாழ்த்துரை இடம்பெற்றது, அதனைத் தொடர்ந்து பொது சுகாதார பரிசோதகர் அவர்கள் Covid 19 தொற்று வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், கிராம நிரவாக உத்தியோகத்தர், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.




















