வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையுடன், காரைநகர் பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலையத்தினால் நடாத்தப்படும் ஆடை வடிவமைத்தல், அழகுக்கலை மற்றும் மனைப்பொருளியல் கண்காட்சி 24.02.2022 அன்று உதவிப் பிரதேச செயலாளர் செல்வி.கஜனி குகஈசன் அவர்களது தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக எமது பிரதேச செயலாளர் திரு.மரியதாசன் ஜெகூ அவர்களும், சிறப்பு விருந்தினராக யாழ் மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.நா.பஞ்சலிங்கம் அவர்களும், யாழ்ப்பாண பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி.சூ.வக்சினி அவர்களும் கலந்து கொண்டனர்.
மேற்படி நிகழ்வில் பயிற்சியை பூர்த்திசெய்த பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ்களும், சிறப்பு பெறுபேற்றை பெற்ற பயிற்சியாளர்களுக்கு பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மேலும் பயிற்சியாளர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றது.
![]() |
![]() |
![]() |
![]() |








