இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கனத்தின் அனுசரணையில் காரைநகர் பிரதேச செயலக மகா சிவராத்திரி விழாவானது 11.03.2021 வியாழக்கிழமை பாலாவேடை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது. பாலாவோடை முத்துமாரி அம்மன் அறநெறிப்பாடசாலை மாணவர்கள், திக்கரை இந்து அறநெறிப்பாடசாலை மாணவர்களின் பேச்சு, தனி நடனம், குழு நடனம், தனிப்பாடல், குழுப்பாடல் போன்ற கலை நிகழ்வுகன் நடைபெற்றன. இந்நிகழ்வில் இந்து கலாசார உத்தியோகத்தர், J/44 கிராம உத்தியோகத்தர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், ஆலய நிர்வாகத்தினர், திக்கரை இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர். மேலும் கலை நிகழ்வில் பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.
![]() |
![]() |
|||||
![]() |
![]() |








