2017 ஆம் ஆண்டு நடைபெற்ற மனைப்பொருளியல் டிப்ளோமா பயிற்சி நெறியில் மாவட்ட மட்டத்தில் பயிலுனர்களை அதிகளவு நேர்த்தியான பொருட்களை உருவாக்க வைத்து, யாழ் மாவட்டத்தில் முதலாமிடத்தைப் பெற்ற எமது பிரதேச செயலக தையல் போதனாசிரியர் திருமதி ப.மொறாயஸ் அவர்கள் கிராம அபிவிருத்தித் திணைக்களம் வட மாகாணத்தால் 31.10.2018 அன்று இவ் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

2017 ஆம் ஆண்டிற்கான கிராம அபிவிருத்தித் திணைக்களம் வட மாகாணத்தால் கள மேற்பார்வையின் போது யாழ் மாவட்டத்தில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தைப் பெற்ற காரைநகர் பிரதேச செயலக டிப்ளோமா பயிற்சி நிலையத்திற்கு இவ் விருது 31.10.2018 அன்று வழங்கப்பட்டது.





