2022ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வானது 03.01.2021 அன்று காரைநகர் பிரதேச செயலக முன்றலில் காலை 09.00 மணியளவில் தேசியக்கொடியேற்றலுடன் ஆரம்பமாகியது. இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து அலுவலர்கள் 2022 ஆம் ஆண்டுக்கான உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். மேலும் உத்தியோகத்தர்கள் அனைவரும் நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு இரண்டு நிமிட மௌனஅஞ்சலி செலுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து பிரதேச செயலரின் உரை, சுகாதார நடைமுறைகள் தொடர்பான சுகாதார பரிசோதகரின் உரை ஆகியவற்றுடன் நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |










