எமது பிரதேச செயலகத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழா 2024.06.04 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பி.ப 02.30 மணிக்கு காரை சலன்சர்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் பிரதேச செயலாளர் செல்வி. ரஞ்சனா நவரத்தினம் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மைதான நிகழ்வுகளான 100M, 200M (ஆண்,பெண்) , 4×100 (ஆண்,பெண்) அஞ்சலோட்டம் என்பன நடைபெற்றது. உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் தோப்புக்காடு விளையாட்டுக்கழகம் எதிர் ஐயனார் விளையாட்டுக் கழகத்திற்கிடையே நடைபெற்று இறுதியில் ஐயனார் விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு.ம.பிரதீபன் (பதில் அரசாங்க அதிபர் , மாவட்டசெயலகம், யாழ்ப்பாணம்) அவர்களும், சிறப்புவிருந்தினர்களாக திருமதி.ச.மஞ்சுளாதேவி (பிரதேச செயலாளர் , பிரதேசசெயலகம், ஊர்காவற்றுறை) அவர்கள், திரு.க.சிவகரன் (பிரதேச செயலாளர், பிரதேச செயலகம், வேலணை) அவர்கள், திருமதி.உ.கவிதா (பிரதேச செயலாளர், பிரதேச செயலகம், சங்கானை) அவர்கள், கௌரவ விருந்தினராகளாக திரு.அ.ஜெகதீஸ்வரன் (அதிபர், காரைநகர் இந்துக்கல்லூரி) அவர்களும் மற்றும் திரு. க. விஜிதரன் (மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர், மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம்) அவர்களும் மற்றும் திரு.கு.சர்வானந்தலிங்கம் (லண்டன், களபூமி பிரித்தானிய ஒன்றியச் செயலாளர்) அவர்கள், கலாநிதி.E.S.P நாகரத்தினம் (பிரபல தொழிலதிபர்) அவர்கள் மற்றும் திரு.பா.சஜிந்தராம் (தேசிய விளையாட்டு வீரன்) அவர்கள் மற்றும் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம மட்ட உத்தியோகத்தர்கள், விளையாட்டுக்கழக வீர, வீராங்கனைகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |


















































