அரசாங்கத்தினால் இதுவரை வழங்கப்பட்டு வந்த அனைத்துவிதமான நலன்புரி கொடுப்பனவுகளும் கீழ் காணப்படும் விதி முறையின் கீழ் இனி வழங்கப்படும்.
அந்த வகையில் புதிய கொடுப்பவு பற்றிய முறைகளை மக்கள் சரியாக அறியாதிருப்பதால் கீழே உள்ள தகவலை முழுமையாக வாசித்து அறியவும்.
நலன்புரி நன்மைகள் சபை உதவி கொடுப்பனவு என இது இனி அழைக்கப்படும்.
அரசாங்கத்தின் நலன்புரி நன்மைகள் சபையின் உதவித் தொகையை பெறுவதற்கு தகுதியுடைய பயனாளிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைய முகவரியில் தெரிவு செய்யப்பட்ட குடும்ப விபரங்களை உங்கள் கிராம சேவகர் பிரிவை தெரிவு செய்வதன் மூலம் பார்வையிட முடியும்.
வழங்கப்படவிருக்கின்ற உதவித்தொகை விபரம்:
1. மிக வறுமை (Severely Poor) - மாதாந்தம் ரூ. 15,000.00
2. வறுமை (Poor) - மாதாந்தம் ரூ. 8,500.00
3. பாதிப்புக்கு உள்ளானோர் (Vulnerable) - மாதாந்தம் ரூ. 5,000.00
4. நிலையற்ற வருமானம் (Transient) - மாதாந்தம் ரூ. 2,500.00
***********
உதவித் தொகை பெறுவதற்கு தெரிவு செய்யப்படாதவர்கள் / தகுதியின்றி தெரிவு செய்யப்பட்டவர்கள் தொடர்பான மேன்முறையீடு 30.06.2023 வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
Online முறையின் மூலம் மேன்முறையீட்டு / ஆட்சேபனைகளை,
எனும் இணைய முகவரிக்கு சென்று தெரிவிக்க முடியும்.
அல்லது,
மேன்முறையீட்டு / ஆட்சேபனை மாதிரி படிவத்தினை,
எனும் இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து, படிவத்தினை பூரணப்படுத்தி அனுப்ப வேண்டும்.
அல்லது,
1924 என்கின்ற நலன்புரி நன்மைகள் சபையின் விரைவு தொடர்பு எண்ணுக்கு (Hotline) அழைப்பினை மேற்கொண்டு தெரிவிக்கமுடியும்.
சமூக நலன்புரி நன்மைகள் தொடர்பாக தாங்களே தங்கள் தொலைபேசி மூலம் ஆட்சேபனைகள் மற்றம் கோரிக்கைகளினை தெரிவிப்பதற்கு கீழுள்ளஇணைப்பை பாரடவையிடவும்





