காரைநகர் பிரதேச செயலகத்தில் மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தரின் ஏற்பாட்டில் 12.01.2022 அன்று HNB Assurance நிறுவனத்தினால் தொழில் வாய்ப்பினை எதிர்பார்த்து காத்திருக்கும் இளைஞர் யுவதிகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.இந்நிழ்வில் காரைநகர் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளும், பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் அடுத்த கட்டமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை 21.01.2022 அன்று காலை 10 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் விழிப்புணர்வு செயலமர்வு இடம்பெறவுள்ளது. HNB Assurance நிறுவனத்தின் வேலைவாய்ப்பானது முழுநேரம், பகுதிநேரத்தினை அடிப்படையாக கொண்டதாக காணப்படுவதுடன் யாழ்மாவட்டத்தில் இரு கிளைகள் புதிதாக ஆரம்பிக்கப்பட இருப்பதும் குறிப்படத்தக்கது. எனவே வேலைவாய்ப்பினை எதிர்பார்த்து காத்திருக்கும் இளைஞர் யுவதிகளை இந்நிகழ்வில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
![]() |
![]() |







