கிராமிய மட்ட காணிப்பயன்பாட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் குறைந்த பாவனையிலுள்ள வீட்டுத்தோட்ட நிலங்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்தல் தொடர்பான செயற்திட்டமானது இன்று (22.07.2021) முற்பகல் 10.00 மணியளவில் காரைநகர் பிரதேச செயலக சிறு மாநாட்டு மண்டபத்தில் காரைநகர் வடமேற்கு (J/41) கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 20 பயனாளிகளுடன் நடைபெற்றது. இந்நிகழ்வில் வளவாளராக காரைநகர் கமநல சேவைகள் நிலையத்தின் விவசாய போதனாசிரியர் அவர்கள் கலந்து கொண்டு ”சாரல் சொட்டு நீர்ப்பாசனம்” தொடர்பான விளக்கவுரை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

Meeting2 Meeting1
Scroll To Top