மனிதவலு மற்றும் வேலை வாய்ப்புத் திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டில் 20.07.2021 காலை 10.00 மணிக்கு J/44 ஊரி கிராம அலுவலர் அலுவலகத்தில் பெற்றோரை விழிப்புணர்வூட்டும் நிகழ்வு நடாத்தப்பட்டது. இந்நிகழ்வினை காரைநகர் பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் செல்வி.கு.கஜனி அவர்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் காரை தெற்கு (J/44 ) கிராம அலுவலர் பிரிவைச்சேர்ந்த 46 பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இதன் போது பிள்ளைகளின் இன்றைய நடத்தைகள் தொடர்பானதும் அவர்களை எவ்வாறு நல்வழிப்படுத்தி இந்நாட்டிற்கும் பிரதேசத்திற்கும் சிறந்த கல்விமான்களாக ஆக்குவது தொடர்பான விழிப்புணர்வு ஊட்டப்பட்டது. மேலும் இன்றைய சூழ்நிலையில் மாணவர்களின் கற்றல் செயற்பாடு பற்றி ஆராயப்பட்டு தீர்வுகளும் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் வளவாளர்களாக சண்டிலிப்பாய் மற்றும் உடுவில் பிரதேச செயலக மனித வலு வேலை வாய்ப்புத்திணைக்கள உத்தியோகத்தர்களான திரு.சுரேஸ்குமார் மற்றும் திரு.குகநேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
![]() |
![]() |







