காரைநகர் பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச்சங்க வருடாந்த ஒன்றுகூடலும் பிரிவுபசார நிகழ்வும் 06.03.2021 சனிக்கிழமை காலை 09.30 மணிக்கு ஊழியர் நலன்புரிச்சங்க தலைவர் திரு. சி.மயுரன் தலைமையில் ஆரம்பமானது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக எமது பிரதேச செயலரும், நலன்புரிச்சங்க போசகருமாகிய மதிப்புக்குரிய திரு.மரியதாசன் ஜெகூ அவர்கள் கலந்துகொண்டார்.
இந்நிகழ்விலே விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு அழைத்துவரப்பட்டதுடன் மங்கள விளக்கேற்றல், வரவேற்பு நடனம் போன்ற நிகழ்வுகளுடன் ஆரம்பமாகி கடந்த ஆண்டு எமது பிரதேச செயலகத்திலிருந்து ஓய்வுபெற்று, இடமாற்றம் பெற்று சென்ற உத்தியோகத்தர்களின் சேவையைப்பாராட்டி அவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் மகிழ்வுட்டல் நிகழ்வுகள், இசை நிகழ்வுகள் அலுவலர்களால் நிகழ்த்தப்பட்டது. அத்துடன் மதிய உணவும் வழங்கப்பட்டு அதனைத்தொடர்ந்து இசை நிகழ்வுகள் சிறப்பாக நடாத்தப்பட்டு பி.ப 3.30 மணியளவில் விழா இனிதே நிறைவுற்றது.
![]() |
![]() |







