நீதியமைச்சினால் மேற்கொள்ளப்படும் “ நீதிக்கான அணுகுவழி ” நடமாடும் சேவை.
“Access to Justice” Mobile Programme
நீதியமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் சேவை இம்மாதம் 29, 30 ஆம் திகதிகளில் காலை 9.30 மணிதொடக்கம் 4 மணிவரை யாழ். மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந் நடமாடும் சேவையில் பல திணைக்களங்கள் கலந்துகொள்ளவுள்ளமையினால் பொதுமக்கள் இந்நடமாடும் சேவையை பயனுள்ளவகையில் பயன்படுத்தி தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் தெரிவித்தார்.

மேலும், இந்நடமாடும் சேவையில் கலந்துகொள்ளவுள்ள திணைக்களங்களும் அவற்றின் மூலமாக மக்களுக்கு வழங்கப்படவுள்ள சேவைகளும் கீழ்வருமாறு.
HNB Assurance நிறுவனத்தின் வேலை வாய்ப்பு தொடர்பான செயலமர்வு
![]() |
![]() |
![]() |
![]() |
2022 இற்கான வாழ்வாதார உதவிக்கான விண்ணப்பம் கோரல்
2022 இற்கான வாழ்வாதார உதவி தேவைப்படுவோர் தமது விண்ணப்பங்களை கிராம மட்ட அலுவலர்களான கிராம அலுவலர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரிடம் உள்ள விண்ணப்பப்படிவங்களின் ஊடாக தங்கள் கோரிக்கைகளை சமர்ப்பிக்கமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
தைப்பொங்கல் நிகழ்வு 2022
2022 ஆம் ஆண்டிற்கான தைப்பொங்கல் நிகழ்வானது காரைநகர் பிரதேச செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (திங்கட்கிழமை) 18.01.2022 அன்று பிரதேச செயலக முன்றலில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
![]() |
![]() |
![]() |
![]() |
HNB Assurance நிறுவனத்தின் தொழில் வாய்ப்பு தொடர்பான கருத்தரங்கு
காரைநகர் பிரதேச செயலகத்தில் மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தரின் ஏற்பாட்டில் 12.01.2022 அன்று HNB Assurance நிறுவனத்தினால் தொழில் வாய்ப்பினை எதிர்பார்த்து காத்திருக்கும் இளைஞர் யுவதிகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.இந்நிழ்வில் காரைநகர் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளும், பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் அடுத்த கட்டமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை 21.01.2022 அன்று காலை 10 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் விழிப்புணர்வு செயலமர்வு இடம்பெறவுள்ளது. HNB Assurance நிறுவனத்தின் வேலைவாய்ப்பானது முழுநேரம், பகுதிநேரத்தினை அடிப்படையாக கொண்டதாக காணப்படுவதுடன் யாழ்மாவட்டத்தில் இரு கிளைகள் புதிதாக ஆரம்பிக்கப்பட இருப்பதும் குறிப்படத்தக்கது. எனவே வேலைவாய்ப்பினை எதிர்பார்த்து காத்திருக்கும் இளைஞர் யுவதிகளை இந்நிகழ்வில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
![]() |
![]() |

















