விலைமனுக் கோரல்

வட மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் காரைநகர் பிரதேச செயலகமும் கலாசார பேரவையும் இணைந்து நடாத்திய பிரதேசப் பண்பாட்டுப் பெரு விழா - 2025
வட மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் காரைநகர் பிரதேச செயலகமும் கலாசார பேரவையும் இணைந்து நடாத்திய பிரதேசப் பண்பாட்டுப் பெரு விழாவானது பிரதேச செயலாளர் செல்வி.ந.ரஞ்சனா அவர்களின் தலைமையில் 2025/8/14 ஆம் திகிதி காலை 9.30 மணியளவில் காரைநகர் இந்துக்கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண கௌரவ ஆளுநர் உயர்திரு நா.வேதநாயகன் ஐயா அவர்களும்,சிறப்பு விருந்தினர்களாக யாழ் மாவட்டச் செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபர் திரு .கை.சிவகரன் அவர்களும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மேனாள் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராசா அவர்களும் கௌரவ விருந்தினர்களாக முது கலைஞர் திரு.சு.தர்மலிங்கம் அவர்களும் இளங்கலைஞர் திரு.நா.பிரபாகரன் அவர்களும் ,ஏனைய திணைக்கள உத்தியோகத்தர் ,பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள், பிரதேச கலைஞர்கள் மற்றும் பிரதேச மக்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.இந் நிகழ்வில் காரைநகர் பிரதேச பண்பாடுகளைப் பிரதிபலிக்கும் பாண்பாட்டு ஊர்திகளும் கலைநிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்றது.






வீடமைப்புத் திட்டம் 2025 பயனாளிகள் தெரிவு
நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சினால் 2025 ம் ஆண்டு எமது செயலக பிரிவில் வீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ரூபா 01 மில்லியன் பெறுமதியான 10 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப் பயனாளிகளை தெரிவு செய்வதற்காக எமது பிரிவில் வீடு தேவையானோர் பட்டியல் Housing Master List இருந்து புள்ளியிடலின் அடிப்படையில் வீட்டுத் திட்டத்திற்கான அடிப்படைத் தகமைகள் மற்றும் தெரிவுக்கான நியதிகளின் அடிப்படையில் பெற்ற புள்ளிகளினை கொண்டு 10 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றின் முழுமையான விபரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் பிரதேச செயலகம் மற்றும் தெரிவு செய்யப்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இத் தெரிவு தொடர்பாக ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின் எழுத்து மூலம் 07.03.2025 திகதிக்கு முன்னதாக பிரதேச செயலக வரவேற்பு கரும பீடத்தில் வைக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டத்திற்கான முறைப்பாட்டு பெட்டியில் செலுத்த முடியும். இத் திகதிக்கு பின்னர் கிடைக்கப் பெறும் முறைப்பாடுகள் எவையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது என்பதனையும் அறியத்தருகின்றேன்.
(குறிப்பு - இப்பட்டியல் இறுதியானது அல்ல, முறைப்பாட்டின் பின்னராக மீளாய்வு செய்து இறுதி செய்யப்படும் )
பிரதேச செயலாளர், பிரதேச செயலகம், காரைநகர்




2025 ஆம் ஆண்டிற்கான அலுவலக கடமையை ஆரம்பித்தல் நிகழ்வு
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
"அஸ்வெசும நலன்புரித்திட்டம் 2024” விண்ணப்பம் சமர்ப்பிக்க தவறியவர்களிற்கான மீண்டும் ஓர் சந்தர்ப்பம்!!!
பின்வரும் விண்ணப்பதாரிகள் மட்டுமே இரண்டாம் கட்ட விண்ணப்பங்களை மேற்கொள்ள முடியும்.
1. அஸ்வெசும முதற் கட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாது போனவர்கள் அல்லது விண்ணப்பிக்க தவறியவர்கள் அனைவரும் தற்போது விண்ணப்பிக்க முடியும்.
2. முதற் கட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பித்த போதிலும் விண்ணப்பதாரியின் தகவல்கள் கணக்கெடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படவில்லை எனின் அந்த விண்ணப்பதாரிகளும் தற்போது விண்ணப்பிக்க முடியும்.Read more: "அஸ்வெசும நலன்புரித்திட்டம் 2024” விண்ணப்பம் சமர்ப்பிக்க தவறியவர்களிற்கான மீண்டும் ஓர்...














