2025 ஆம் ஆண்டிற்கான அலுவலக கடமைச் செயற்பாடுகள் எமது பிரதேச செயலாளர் செல்வி.ந.ரஞ்சனா அவர்களின் தலைமையில் தேசிய கொடியேற்றப்பட்டு தேசிய கீதம் இசைத்தலுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த அனைவரையும் நினைவு கூர்ந்து 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
Clean Sri Lanka தேசிய நிகழ்ச்சி திட்டத்துடன் இணைந்ததாக சத்தியப்பிரமாணம் செய்யப்பட்டதுடன், ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற Clean Sri Lanka நிகழ்ச்சி திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இலத்திரனியல் அலைவரிசை மூலம் நேரடியாக எமது அலுவலர்கள் பார்வையிடும் வண்ணம் ஒலி, ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளர் உரை மற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்களது வாழ்த்து உரை மற்றும் உத்தியோகத்தர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றது.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |














