வட மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் காரைநகர் பிரதேச செயலகமும் கலாசார பேரவையும் இணைந்து நடாத்திய பிரதேசப் பண்பாட்டுப் பெரு விழாவானது பிரதேச செயலாளர் செல்வி.ந.ரஞ்சனா அவர்களின் தலைமையில் 2025/8/14 ஆம் திகிதி காலை 9.30 மணியளவில் காரைநகர் இந்துக்கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண கௌரவ ஆளுநர் உயர்திரு நா.வேதநாயகன் ஐயா அவர்களும்,சிறப்பு விருந்தினர்களாக யாழ் மாவட்டச் செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபர் திரு .கை.சிவகரன் அவர்களும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மேனாள் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராசா அவர்களும் கௌரவ விருந்தினர்களாக முது கலைஞர் திரு.சு.தர்மலிங்கம் அவர்களும் இளங்கலைஞர் திரு.நா.பிரபாகரன் அவர்களும் ,ஏனைய திணைக்கள உத்தியோகத்தர் ,பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள், பிரதேச கலைஞர்கள் மற்றும் பிரதேச மக்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.இந் நிகழ்வில் காரைநகர் பிரதேச பண்பாடுகளைப் பிரதிபலிக்கும் பாண்பாட்டு ஊர்திகளும் கலைநிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்றது.





